செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2 நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மோடி.. குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.!

May 22, 2022 06:00:06 PM

குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக தலைவர்களுடன் விவாதிக்க அந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் 3ஆவது மாநாடு வரும் 24ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானத்தில் டோக்கியோ செல்கிறார். உக்ரைன் போர், காலநிலை மாற்றம் ஆகியவற்றோடு சீனாவின் ஆதிக்கம் தொடர்பாகவும் குவாட் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் சுமார் 40 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, 23 நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 24ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆண்டனி அல்பனீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ப்யூமியோ கிஷிடோ ஆகியோரை தனித்தனியே சந்திக்க உள்ள பிரதமர் மோடி, அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்.

மேலும், சுமார் 40 ஜப்பானிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்தித்து பேச உள்ள பிரதமர், அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

இந்நிலையில் தனது ஜப்பான் பயணம் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக குவாட் அமைப்பின் தலைவர்களுடன் விவாதிக்க மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும், இந்தியா - ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதேபோல், அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின்போது பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான இருதரப்பு சந்திப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.


Advertisement
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement