முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
1991ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் திருப்பெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.
இதன் 31ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர்பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர் மகள் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.