செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் - அமைச்சர் பியூஷ் கோயல்

May 19, 2022 06:32:17 AM

பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை  மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் நாள் நடைபெறும் என்று மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பருத்தி உற்பத்தி சார்ந்த வர்த்தகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பருத்தி விவசாயிகள், நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். பருத்தி மற்றும் நூலை முதலில் உள்நாட்டுத் தொழிலுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சர், மீதமுள்ளவற்றை ஏற்றுமதிக்குப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தார். நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் உள்நாட்டு தொழில்துறை பாதிப்படையும் வகையில் ஏற்றுமதி இருக்கக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் எனவும் பியுஸ் கோயல் உறுதி அளித்தார். பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதியான நிபுணர் சுரேஷ் அமிர்தலால் கோடக் தலைமையில் இந்திய பருத்திக் கவுன்சில் அமைக்கப்படும் என்றும், இந்த கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பருத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதுடன் விவாதங்களையும் இந்த கவுன்சில் நடத்தும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார் .

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஸ்கோயல் ஆகியோரை கனிமொழி தலைமையிலான தமிழக எம்பிக்கள் சந்தித்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


Advertisement
சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை... ஏ.கே. 47 துப்பாக்கி, வெடி பொருட்களும் பறிமுதல்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
படப்பிடிப்புக்குக் கொண்டு வரப்பட்ட யானைகள் மோதல்.. காட்டுக்குள் ஓடிய யானையை தேடும் படக்குழுவினர்..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement