செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விபத்து நேர்ந்த கட்டடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் தலா 10 இலட்ச ரூபாய் நிதி..!

May 14, 2022 03:57:43 PM

டெல்லியில் தீவிபத்து நேர்ந்த கட்டடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் நேற்றுமாலை பற்றிய தீ, விரைவாக மேலுள்ள கட்டடங்களுக்குப் பரவியது. தீப்பிடித்தபோது அங்கு 200 பேர் முதல் 300 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. கண்காணிப்புக் கேமரா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ளது.

கட்டடத்தின் ஓர் அரங்கில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றதாகவும், திடீரென மின்சாரம் துண்டித்த பின்னரே கட்டடத்தில் தீப்பற்றியது அவர்களுக்குத் தெரிய வந்ததாகவும், கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பலர் தீயில் சிக்கிக் கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

 மாலையில் பற்றிய தீ நள்ளிரவில் முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 27 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், நாற்பதுக்கு மேற்பட்டோர் தீக்காயமடைந்ததாகவும், 29 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில் மேலும் மூன்று உடல் பகுதிகள் கிடைத்ததாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 உடல்கள் அனைத்தும் கருகிவிட்டதால் உயிரிழந்தோரை அடையாளம் காண முடியவில்லை என்றும், டிஎன்ஏ மாதிரிகளைப் பரிசோதித்தே அடையாளம் காணமுடியும் என்றும் காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 விபத்து நேர்ந்த கட்டடத்துக்குத் தீத்தடுப்புப் பாதுகாப்புச் சான்றிதழ் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய பிரிவுகளில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் கட்டடத்தில் செயல்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவான கட்டடத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 தீவிபத்து நேர்ந்த கட்டடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா 10 இலட்ச ரூபாயும், தீக்காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.




Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement