செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு.!

May 14, 2022 08:19:20 AM

டெல்லியில்  நேற்று மாலை வணிக வளாகத்தில் பிடித்த தீ நள்ளிரவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 40 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் மேற்குப்பகுதியான முண்டக்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் நேற்று மாலை நாலரை மணியளவில் தீப்பிடித்தது.

கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவிய தீ உக்கிரமாக எரிந்ததால் அதனுள்ளே அலுவலகங்களிலும் கடைகளிலும் இருந்த பலர் உயிர்தப்ப போராடினர். சிலர் மாடிகளில் இருந்தும் குதித்து படுகாயம் அடைந்தனர்.

தீ வேகமாகப் பரவியதையடுத்து மூன்று மாடிகளும் கருகி சாம்பலாகின. 30 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி 50க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர்.

தீ அணைக்கப்பட்டதும் அதில் உயிரிழந்த 27 உடல்கள் மீட்கப்பட்டன. 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

கட்டட உரிமையாளர்கள் இரண்டு பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கட்டடத்தில் ஒரேயொரு குறுகிய படிக்கட்டுதான் இருந்தது என்றும் தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்றும் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள், கட்டடத்திற்கு தீயணைப்புத்துறையின் அனுமதியும் இல்லை என்று தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து டிவிட்டர் பதிவில் வேதனையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
காதலியின் நகைகளை மீட்க ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி
சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை... ஏ.கே. 47 துப்பாக்கி, வெடி பொருட்களும் பறிமுதல்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
படப்பிடிப்புக்குக் கொண்டு வரப்பட்ட யானைகள் மோதல்.. காட்டுக்குள் ஓடிய யானையை தேடும் படக்குழுவினர்..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..


Advertisement