செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கோடை வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்

May 03, 2022 05:13:00 PM

122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிகமாக பதிவான வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக கோதுமை விலை ஏற்றம் கண்ட நிலையில், தானிய உற்பத்தியில் 2ஆவது மிகப்பெரிய நாடான இந்தியா மார்ச் வரையிலான நிதியாண்டில் 7.85 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 275சதவீதம் அதிகமாகும்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கோதுமை உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 111 மில்லியன் டன் கோதுமை சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து வீசிய வெப்பக்காற்று காரணமாக, இந்த உற்பத்தியானது 105 மில்லியன் டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தி 6சதவீதம் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையில், வெப்பஅலை காரணமாக 20சதவீதம் அளவுக்கு கோதுமை உற்பத்தி குறையக்கூடும் எனவும், இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவும் குறையக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, போர் காரணமாக உக்ரைனில் தானிய உற்பத்தி முடங்கிய நிலையில், இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கோதுமை விலையை உயர்த்தியதால், ஏற்றுமதி குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைகளிலும் கோதுமை விலை 15சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

தற்சமயம், உணவு தேவை குறித்து பெரிய நாடுகள் கவலை கொண்டுள்ள சூழலில், இந்திய விவசாயிகள் உலகுக்கே உணவு அளிக்கும் வகையில் முன்னேறியுள்ளதாக சமீபத்தில் பெர்லினில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement