செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

"30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” - ஜெர்மனி வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரை

May 03, 2022 06:27:33 AM

நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக பெர்லினில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.   

ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலில் ஜெர்மனி சென்றார். தலைநகர் பெரிலினில் பிரதமர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இந்தியா - ஜெர்மனி இடையில் பசுமை வளர்ச்சி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு 10 பில்லியன் யூரோ நிதி வழங்க ஜெர்மனி முன்வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்திய நிலையில், போரில் யாருக்கும் வெற்றிக் கிட்டப்போவதில்லை என தெரிவித்த பிரதமர் மோடி ஆரம்பக் கட்டத்தில் இருந்து இரு நாடுகளும் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா வலியுறுத்தி வருவதாக கூறினார்.

இதையடுத்து, பெர்லினில் உள்ள Potsdamer Platz சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்தியாவில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், 100-வது சுதந்திர தினத்தின் போது இந்தியா எந்த உச்சத்தில் இருக்கப் போகிறதோ அந்த இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார். நாட்டில் மக்களின் வாழ்க்கை, கல்வி தரம் உயர்ந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் 10 ஆயிரம் சேவைகளை, மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆன்லைன் மூலம் வழங்கி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலகில் ஒட்டுமொத்தமாக நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement