செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கோடை வெப்பம் எதிரொலி - மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

May 02, 2022 06:24:41 AM

நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். 

நாடு முழுவதும் கோடையின் வெப்பம் தகித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் 122 ஆண்டுகளில் காணாத அளவில் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெளியில் தொடங்க உள்ளதால் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெப்ப நிலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வரவிருக்கும் நாட்களில் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என்பதால் மருத்துவமனைகளில், ஐஸ் பெட்டிகள், தண்ணீர் விநியோகம், உப்பு சர்க்கரை கரைசல் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதை உறுதிபடுத்தவும், தடையில்லா மின்சாரம் விநியோகம், தேவையான இடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பயன்படுத்துவது, குளிர்ச்சியான சூழலை அளிக்கும் வகையில் மருத்துவமனை கூரைகளை மாற்றியமைத்து உள் மற்றும் வெளிப் புறங்களில் நிலவும் வெப்பத்தை குறைப்பது, மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, தேவையான அளவில் உணவு, தண்ணீர், உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்வது, வெயில் காலங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட கோடைக் காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளம்பரம் உள்ளிட்டவை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement