செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அழகில்லை என்பதால் மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்..! கொலையை மறைக்க நாடகம்!

Apr 30, 2022 10:41:48 AM

திருமணமாகி 2 வருடம் கடந்த நிலையில் மனைவி அழகில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த கணவன், மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவரது மனைவி கல்யாணி இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்த நாட்களிலிருந்தே கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்கள் தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மூன்று மாத கர்ப்பிணியான தனது மனைவி கல்யாணி தான் திட்டியதால் மனமுடைந்து வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தருண் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், திருமணமான நாள் முதல் தன் மனைவி அழகில்லை என்று அடிக்கடி தகராறு செய்து வந்த கணவர் தருண். மனைவியை தனக்கு பொருத்தமில்லாதவர் என்று அடித்து உதைத்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி கர்ப்பிணியானதால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனது உறவினருடன் இணைந்து தனது மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலி மருந்து மற்றும் ஆசிட் ஆகியவற்றை வாயில் ஊற்றி கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கல்யாணி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கணவர் தருணையும், உடந்தையாக இருந்த உறவினரையும் கைது செய்துள்ளனர்.

மனைவி அழகாக இல்லாததை காரணம் காட்டி மூன்று மாத கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா
தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா
சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86
2028 வரை இலவசமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உள்ள தொடர்பு உறுதி - சி.பி.ஐ.
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி
பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
"ஹரியானா தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்" தலைக்கனமும், ஆணவமுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் - சாம்னா நாளிதழ் விமர்சனம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement