செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனத்தின் குரல் பிரதமரின் வானொலி உரை

Apr 24, 2022 09:57:59 PM

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நிகழ்வதால் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். நீர் வளத்தைச் சேமிக்க வலியுறுத்தியுள்ளதுடன், கணித உலகில் பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தது உலகுக்கு இந்தியா அளித்த கொடை எனவும் தெரிவித்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்தியதன் மூலம் நாடு டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடைபெறுவதையும், மார்ச் மாதத்தில் 10 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு யுபிஐ மூலம் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

 கிடைக்கும் நீர்வளம், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியன எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்தையும் வேகத்தையும் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், தண்ணீரைச் சேமிப்பதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

உயிர் வாழ்வதற்கு அடிப்படை நீர் என்றும், அது மிகப்பெரிய வளம் என்பதால், நம் முன்னோர் நீர்ச் சேமிப்புக்கு முதன்மை அளித்ததாகவும் தெரிவித்தார். பழங்காலத்தில் இருந்தே நீரைச் சேமிக்கக் குளங்கள், ஏரிகள் வெட்டுவது ஒருவரின் சமுதாய மற்றும் ஆன்மீகக் கடமையாகப் புராணங்களிலும் வேதங்களிலும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பூச்சியத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் உலகில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்றும், பூச்சியத்தையும் முடிவிலியையும் இந்தியா கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.

ஒன்றுக்குப் பின் பூச்சியத்தை வரிசையாகப் போடுவதன்மூலம் பத்து நூறு ஆயிரம் எனத் தொகையை வரிசைப்படுத்த முடிவதாகவும், ஒன்றுக்குப் பின் 62 பூச்சியங்கள் போட்டுக் கணக்கிடும் மகோகம் என்கிற எண்ணையும் இந்தியர்கள் அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். வேதக் கணித முறை இந்தியாவில் உள்ளதால் இந்தியர்களுக்குக் கணிதம் எப்போதும் கடினமான பாடமாக இருந்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement