செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கர்நாடக அரசு ஒப்பந்தக்காரரை தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டு

Apr 13, 2022 01:36:21 PM

கர்நாடகத்தில் ஒப்பந்தக்காரரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிந்துள்ள நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் காங்கிரஸ் கட்சியினர் கோரியுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறைப் பணிகளை ஒப்பந்தம் பெற்றுச் செய்து வந்த சந்தோஷ் பாட்டீல் உடுப்பி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆட்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் தன்னிடம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் 40 விழுக்காடு தொகையைக் கமிஷனாகக் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய சாவுக்குக் காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாவே பொறுப்பு எனக் கூறியுள்ளதுடன், தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உதவும்படி பிரதமர், முதலமைச்சர், எடியூரப்பா ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சந்தோசின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தோசைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவருடைய ஆட்களான பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து விரைவான வெளிப்படையான விசாரணை நடத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து அமைச்சர் பதவியில் இருந்து ஈஸ்வரப்பாவை நீக்கக் கோரிக் கடிதம் வழங்கியுள்ளனர்.

 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement