செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியா.!

Mar 27, 2022 09:44:43 AM

கொரோனாவால் முடக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இன்று முதல் இயல்பு நிலைக்குத் தொடங்கியுள்ளது. 40 நாடுகளின் விமான சேவைகள் அனுமதிக்கப்பட்ட போதும், சீனாவில் கொரோனா பரவி வருவதால் அந்நாட்டு விமானங்களுக்கு தடை நீடிக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டாண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

எட்டு மாதங்கள் வரையில் நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் "வந்தே பாரத்" திட்டம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தபோதும், ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், வெளிநாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 40 நாடுகளைச் சேர்ந்த 66 விமான நிறுவனங்களின் விமானங்கள் வாரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தடவை வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இந்தியாவில் இருந்து 27 வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களும் சென்று வர உள்ளன.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து அதிகாலை முதல் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைன் போர் காரணமாக பெட்ரோலியப் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச விமானக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன .


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement