செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2 ஆண்டுகளுக்கு பின் நீக்கப்படுகிறது கொரோனா கட்டுப்பாடு ...!

Mar 24, 2022 06:18:20 AM

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில்,கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில்  ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இனிமேலும் நாடு முழுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டாமென முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 31 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இதற்கு மேல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  இனிமேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டாமென கூறப்பட்டுள்ளது. 

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -இன் படி கொரோனா தொற்றை பரவலை தடுப்பது குறித்த உத்தரவுகள், வழிகாட்டுதல்களை பிறப்பிப்பதை கைவிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி மற்றும் அது சார்ந்த பணிகளில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக குறைந்து வருவதாகவும், கடந்த ஓராண்டாக பெருந்தொற்று மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை, கண்காணிப்பு, தொற்று பரவலை கண்டறிவது,சிகிச்சை, தடுப்பூசி, மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் மத்தியிலும் மேம்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31-க்குள் முடித்துக் கொள்ளலாம் என்றும், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement