இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் 3 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். இருநாடுகளிடையே உள்ள நட்புறவு, இந்தோ பசிபிக் வர்த்தகம், லடாக் எல்லைப் பிரச்சினை , உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விடுத்த பதிவு ஒன்றில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள நீண்டகால பாரம்பரிய நட்புறவை சுட்டிக் காட்டினார். இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடு ஜப்பான் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு இலக்கான 3 புள்ளி 5 டிரில்லியன் யென் நிறைவேறியிருப்பதாக மோடி தெரிவித்தார்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பை அடுத்து இந்தியா ஜப்பான் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.