செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"ஹிஜாப்-க்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்" - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Mar 15, 2022 03:13:59 PM

கர்நாடாவில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்துள்ள அம்மாநில உயர்நீதிமன்றம், ஹிஜாப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. 

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, இஸ்லாமிய மாணவிகள் 18 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தொடர்ந்து 11 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

விசாரணையின் போது மூன்று பிரதான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், அதற்கு பதிலளித்து தீர்ப்பு வாசித்தனர். முதலில், ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தின் 25ஆவது பிரிவின் படி அடிப்படை மத உரிமையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத நம்பிக்கையில் தவறாமல் பின்பற்றவேண்டிய கட்டாய நடைமுறை இல்லை என தீர்ப்பளித்தனர்.

பள்ளி சீருடை சட்டம் அடிப்படை உரிமைகளை பறிக்கிறதா? என்ற கேள்விக்கு, சீருடை சட்டம் அவசியமான கட்டுப்பாடு தான் எனவும், பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது என்றதோடு, அரசின் சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என தெளிவுபடுத்தினர்.

ஹிஜாப் அணிய கர்நாடகா அரசு விதித்த தடை, அனைத்து தரப்பினருக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது பிரிவையும், மதம், இனம், சாதி, பாலினம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து வேறுபாடு காட்டக்கூடாது என்ற 15ஆவது பிரிவையும் மீறுகிறதா என்ற கேள்விக்கு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடகா அரசு விதித்த தடை செல்லும் எனவும், அது நியாயமானது கூட எனக் கூறிய நீதிபதிகள், கல்வி நிலையங்களில் மத அடையாளம் கொண்ட ஆடைகளை தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது எனவும் தீர்ப்பளித்தனர்.

மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் வழக்கில், தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் வரும் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement