செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

உக்ரைனில் சிக்கியுள்ள 13,000 மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் கங்கா' நடவடிக்கை தீவிரம்..! இதுவரை 1,100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு

Feb 28, 2022 08:05:30 AM

உக்ரைனில் சிக்கியுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்கா நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 1,100க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பியுள்ள நிலையில், தொடர்ந்து விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் போலந்து, ரூமேனியா மற்றும் ஹங்கேரி தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 5 விமானங்களில் 1,100க்கும் மேற்பட்டோர் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், அடுத்து 7 விமானங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 249 பயணிகளுடன் புகாரெஸ்ட்டில் இருந்து ஒரு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

இதனிடையே, உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை 10 பேருந்துகள் மூலம் மீட்கும் நடவடிக்கையில் போலந்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. Shehyni பகுதியில் இந்தியர்களை பேருந்து மூலம் மீட்டு தூதரகம் தயார்படுத்தி உள்ள குடியிருப்புகளில் தங்கவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போலந்து தூதரகம் வெளியிட்டுள்ளது. லிவிவ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்கள் அங்கேயே இருக்குமாறும் அறிவிப்பு வரும் வரை வேறெந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement