செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனைவியர் விற்பனைக்கு களவானித்தனம் செய்த மாடர்ன் காதல் தம்பதியர்.. திகைத்து நிற்கும் போலீஸ்.!

Feb 06, 2022 10:20:27 AM

பெங்களூரில் டுவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் தனியாக குழு தொடங்கி, மனைவியரை மாற்றிக் கொள்ளும் வைப் ஸ்வாப்பிங் விபரீதத்தில் ஈடுபட்ட காதல் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். அற்ப ஆசைக்காக மனைவியை கடைபொருளாக்கிவர்கள் கூண்டோடு சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சில மாதங்களுக்கு முன்பு கேரள மா நிலம் கோட்டயம் சங்கனேச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதள குழுக்கள் மூலமாக மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவுடன் தொடர்பில் உள்ள தனது கணவர் தன்னை தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்துவதாக புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீசார், கப்புள்ஸ் மீட் என்ற குழு மூலமாக புடவைகளை மாற்றுவது போல வெட்கமே இல்லாமல் தங்கள் மனைவியை தங்கள் குழுவில் உள்ளோருடன் மாற்றிக் கொண்ட விபரீத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, இந்த குழுவை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இதே போன்றதொரு வில்லங்கமான சம்பவம் கர் நாடக மா நிலம் பெங்களூரிலும் நடந்து வந்தது அம்பலமாகி உள்ளது. ஒய்ப் ஸ்வாப்பிங் என்ற பெயரில் டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வினய் என்பவர் பிரெத்யேக குழுக்களை தொடங்கி உள்ளார்.

அதில் யாரெல்லாம் தங்களை மனைவியரை பிறருக்கு விட்டுக் கொடுக்கின்றனரோ அவர்கள் அந்த குழுவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த குழுவில் உறுப்பினராக சேரும் கணவன் தனது மனைவியின் புகைபடத்தை குழுவில் பதிவு செய்ய வேண்டும், விரும்பும் உறுப்பினருக்கு அவரது மனைவியை தங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக இத்தகையை விபரீத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்படி விட்டுக் கொடுக்கும் வில்லங்க எண்ணம் இல்லாதவர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.அவ்வாறு விலக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சமாச்சாரம் போலீசாரின் காதுகளுக்கு எட்டி வைப் ஸ்வாப்பிங் வினய் சிக்கி உள்ளான்.

எலக்ட்ரானிக் கடை நடத்தி வரும் வினயும் அவனது மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் , மேலை நாட்டு பாணியில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆசைப்பட்ட அவர்கள் தாங்கள் கெட்டதோடு மட்டுமல்லாமல் தங்களின் வில்லங்க ஆசைகளை வைப் ஸ்வாப்பிங் சமூக வலைதள குழுக்கள் மூலம் நிறைவேற்றிவந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரையும் கைது செய்துள்ள போலீஸ் இந்த குழுவில் உள்ள தாராள பிரபுக்களின் பெயர் பட்டியலை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement