செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. விழாக் கோலம் பூண்டது திருப்பதி..

Jan 13, 2022 11:04:49 AM

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவு 12.36 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்க வாசலில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இதனை ஒட்டி 4 டன் மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். காலை 6 மணி முதல் 300 ரூபாய் தரிசனம் டிக்கட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் இன்று காலை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டதால், 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக 30 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக 200 பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்கவாசலுக்கு பல்வேறு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவில் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Advertisement
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement