செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை

Dec 26, 2021 01:21:39 PM

எத்தகைய உயரிய நிலையை அடைந்தாலும் வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதற்கும், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கும் மனத்தின் குரல் வானொலி உரையில் சான்றுகளை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நம் கதவுகளைத் தட்டியுள்ளது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும், உலகளாவிய பெருந்தொற்றைத் தோற்கடிக்கக் குடிமக்களின் முயற்சி முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

குன்னூரில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்ந்தார். தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேப்டன் வருண் சிங் உயிர்பிழைப்பார் என எண்ணிய நிலையில் அவரும் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சவுரிய சக்கரா விருது பெற்ற வருண் சிங், பள்ளி முதல்வருக்கு எழுதிய கடிதத்தைச் சமூக வலைத்தளங்களில் தான் கண்டதாகவும், அதைப் படித்தபோது வெற்றியின் உச்சியைத் தொட்டபோதும் அவர் தனது வேர்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

 

ஆண்டுதோறும் தேர்வு பற்றிய விவாதத்தை மாணவர்களுடன் நடத்தி வருவதைக் குறிப்பிட்ட அவர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இணையவழிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

லக்னோ ரெசிடென்சி பகுதியில் டிரோன் கண்காட்சி நடத்தியதையும், முதல் இந்திய விடுதலைப் போரின் சான்றாக ரெசிடென்சியின் சுவர்கள் உள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை டிரோன் காட்சி மீண்டும் நினைவூட்டியதாகவும் தெரிவித்தார். கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்குத் தெலங்கானாவைச் சேர்ந்த 84 வயதான குரெல்லா விட்டலாச்சார்யா சான்றாக உள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுவயது முதலே பெரிய நூலகம் திறக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த ஆசையால் கல்லூரி விரிவுரையாளர் ஆனதுடன், தான் சேர்த்த புத்தகங்களைக் கொண்டு நூலகத்தைத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.


Advertisement
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
படப்பிடிப்புக்குக் கொண்டு வரப்பட்ட யானைகள் மோதல்.. காட்டுக்குள் ஓடிய யானையை தேடும் படக்குழுவினர்..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement