உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 468 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
மாநில அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அரசின் திருமணப் பரிசாக மணமகளின் பெயரில் 35ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
மேலும் 10ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் திருமண ஜோடிக்கு வழங்கப்பட்டன. இந்த மாநிலத்தில் ஒரே மேடையில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவிடும் வகையில் இத்தகைய திருமணங்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.