செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தை இன்று வாபஸ் பெற விவசாயிகள் முடிவு?

Dec 08, 2021 06:11:05 AM

ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் 5 கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதால், விவசாயிகள் வீடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. டெல்லி அடுத்த சிங்கு எல்லையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் விவசாயிகள், பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலை, வழக்குகள் வாபஸ், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மின்சார சட்டத் திருத்த மசோதாவை விவசாயிகள் ஆலோசனை இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது, பதர்களை எரிப்பதை கிரிமினல் குற்றப்பிரிவில் சேர்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் நேற்று விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அமைச்சர் அமித் ஷா விவசாயிகளுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழியில், அடிப்படை விலையை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உறுதிமொழியை அடுத்து நேற்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இன்றும் இறுதி முடிவு எடுக்க விவசாயிகள் கூடுகின்றனர். இன்று பிற்பகலுக்குள் போராட்டத்தைக் கைவிட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement