செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு.. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை..!

Dec 05, 2021 02:20:29 PM

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புடையவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில் மும்பை, டெல்லி பெங்களூர் சென்னை உள்பட அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெங்களூர் வந்திருந்த தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 66 வயதான நபரிடம் முதன்முதலாக கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றுடன் துபாய்க்குத் சென்று விட்ட நிலையில் பெங்களூரில் பயணம் ஏதும் மேற்கொள்ளாத மருத்துவர் ஒருவரிடம் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் குணமாகிவிட்டதாகவும் கர்நாடக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் குஜராத்தின் ஜாம்நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 72 வயதுடைய ஒருவருக்கும் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கல்யாண் பகுதிக்கு வந்த அந்த நபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி, மும்பை, உள்பட பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த 40 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒமிக்ரான் பாதிப்புகள் மிதமான அளவிலேயே இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் நேரிடவில்லை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 38 நாடுகளுக்கு ஒமிக்ரான் பரவியுள்ள போதும் இதுவரை ஒருவரும் உயிரிழக்கவில்லை.

இந்நிலையில் மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ஒமிக்ரான் பாதிப்புடையவர்களைக் கண்டறியவும் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனை கொண்டு செல்லவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா உள்பட ரிஸ்க் உள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்த தனிப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களிலும் பரிசோதனைகள் தீவிரம் அடைந்துள்ளன.


Advertisement
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம்
வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்..!!
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம்
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
குரங்கம்மை நோய் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுரை
கேரள மாநிலம் திருச்சூரில் 3 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளை என தகவல்
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு
பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து..
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று காரை வழிமறித்து நகை வியாபாரியை கடத்திய கும்பல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement