செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

35 ஆண்டுகளுக்கு பிறகு சக்சஸான காதல்.. 65 வயதில் காதலியை கரம்பிடித்த ரோமியோ... முன்மாதிரியான காதல் ஜோடி

Dec 03, 2021 06:49:31 PM

இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த முதியவர், 65வயதில் தன் காதலியையே கரம்பிடித்த நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. சாதி, வயது என அனைத்தையும் கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு சக்சஸான காதல் கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

மைசூர் நகரிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் 65வயதான சிக்கண்ணா. இவரும், ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரிலும் காதலுக்கு எதிர்ப்பு எழவே, செய்வதறியாமல் ஜெயம்மா, வீட்டில் பார்த்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுள்ளார். ஆனால், ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் பிறந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் வசித்து வந்த சிக்கண்ணாவுக்கு, சமீபத்தில் தான் ஜெயம்மா தனியாக வசித்து வந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, தனது கடைசி காலத்திலாவது காதலியுடன் சேர்ந்து வாழலாம் என எண்ணிய சிக்கண்ணா, திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி ஜெயம்மாளை அணுகியுள்ளார்.

முதுமை காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம் எனக் கூறி ஜெயம்மாளும் திருமணத்திற்கு சம்மதிக்கவே,மேல்கோட்டை பகுதியில் உள்ள கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பார்த்ததும் காதல்...பார்க்காமலேயே காதல்...இன்ஸ்டா காதல்...இன்ஸ்டண்ட் காதல் என விதவிதமான காதல் கதைகள் அரங்கேறி வரும் இந்த காலத்தில், காதலிக்காக 35 வருடம் காத்திருந்த இவரது காதல் போற்றுதலுக்குரியதாகவும், முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது....


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement