செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்

Nov 24, 2021 01:36:57 PM

தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரிசர்வ் வங்கியின் மூலம் இந்தியாவின் பிரத்தியேக டிஜிட்டல் பணம் பகிர்வதற்கும் சட்டமசோதா வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. பிட்காயின், எத்தீரியம், லைட்காயின், டீத்தர், சொலானா போன்ற கிரிப்டோகரன்சிகளில் அதிகளவில் பரிவர்த்தனை செய்கின்றனர். ஒரு பிட்காயின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 42 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயாகும்.

டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு தொடர்பான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் முதலீடு செய்வதால், கிரிப்டோகரன்சி பொருளாதார ரீதியாக புதிய சவாலை ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் கிரிப்டோகரன்சியால் நிதிமோசடிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 2 கோடி கிரிப்டோ முதலீட்டாளர்கள் இருப்பதாகவும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. , தனியார் டிஜிட்டல் கரன்சிக்குத் தடை விதிக்கப்பட்டால் இந்நிறுவனங்கள் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில், கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. தனியார் கிரிப்டோகரன்சிக்கள் அனைத்தையும் தடை செய்ய கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா-2021 வகை செய்கிறது. அதேநேரம் ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமான மின்னணு கரன்சியை அறிமுகம் செய்யவும் வழிவகை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement