செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்ட டிஜிட்டல் பணம் பயன்படுத்தப்படக் கூடாது - பிரதமர் மோடி

Nov 14, 2021 06:22:42 AM

கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் இணைய வழி பணப்பரிவர்த்தனையில் முறைகேடுகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதால், டிஜிட்டல் கரன்சி முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். எந்த மத்திய வங்கிகளாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத கிரிப்டோகரன்சி பணப்பரிவர்த்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட நிதி அமைப்புகள் கவலை தெரிவித்தன.

இந்தநிலையில் கிரிப்டோகரன்சி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது நாட்டின் எல்லைகளைத் தாண்டிய பிரச்சினை என்பதால் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் இதன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணைய வழி சூதாட்டம் போன்ற தவறான பாதையில் இளைஞர்களை வழிநடத்தவும் டிஜிட்டல் பணம் பயன்படுத்தப்படக் கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement