செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ரிசர்வ் வங்கியின் 2 திட்டங்கள்.. பிரதமர் தொடக்கி வைத்தார்..!

Nov 12, 2021 02:03:14 PM

சிறு முதலீட்டாளர்கள் அரசின் கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏழாண்டுகளில் நிதியமைப்பிலும், பொதுத்துறை வங்கிகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறு முதலீட்டாளர் நேரடி முதலீட்டுத் திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த முறைமன்ற நடுவர் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடி முதலீட்டுத் திட்டத்தில் சிறு முதலீட்டாளர்கள், இந்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் கடன்பத்திரங்களில் இணைய வழியில் நேரடியாக முதலீடு செய்யலாம். ஒருங்கிணைந்த முறைமன்ற நடுவர் திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் குறைபாடுகள் தொடர்பான புகார்களுக்குத் தீர்வுகாணலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கியின் புதிய திட்டத்தின் மூலம் நாட்டின் முதலீட்டுக்கான பரப்பை விரிவாக்கியுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் முதலீட்டுச் சந்தையை எளிதாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் அணுக வகை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஏழாண்டுகளில் வாராக்கடன் சிக்கலுக்கு வெளிப்படையான தீர்வு கண்டுள்ளதாகவும், நிதியமைப்புகளிலும் பொதுத்துறை வங்கிகளிலும் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசின் கடன்பத்திரங்களில் சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்யப் பாதுகாப்பான வழிவகை செய்துள்ளதாகத் தெரிவித்தார். வங்கித்துறையில் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்க ஒரே முறைமன்ற நடுவர் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement