செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்திவைத்த லவ்வர் பாய்க்கு தர்ம அடி..!

Oct 29, 2021 07:49:31 AM

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டிற்குள்,  நள்ளிரவில் புகுந்த கல்லூரி மாணவர் ஒருவர், காதலிக்க கட்டாயப்படுத்தி மாணவியின் கழுத்தில் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ருக்கிசிங்கிடம் அவருடன் படிக்கின்ற உறவுக்கார இளைஞர் பிரேம் சிங் காதலை தெரிவித்துள்ளார்.

தான் படிப்பதற்காக கல்லூரிக்கு வந்திருப்பதாக கூறி அவரது காதலை ருக்கி சிங் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி ருக்கி சிங் தன்னுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு பிரேம் சிங் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.

ருக்கிசிங் படுக்கை அறைக்குள் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் ருக்கிசிங் கழுத்தில் வைத்து தன்னை காதலிக்க கோரி மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததோடு காதலிக்கவும் மறுத்துள்ளார். இதையடுத்து ருக்கி சிங்கின் கழுத்தை அறுத்ததோடு, அவரது கை மற்றும் காலில் வெட்டியுள்ளான்.

வலியால் சத்தமிட்ட ருக்கிசிங்கின் அலறல் கேட்டு அங்கு வந்த அவருடைய பெற்றோர் பிரேம் சிங்கை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தூணில் கட்டிவைத்தனர். போலீசாரை வரவழைத்து பிரேம்சிங்கை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பிரேம் சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ருக்கிசிங் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement