செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பெகாசஸ் வழக்கு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...

Oct 27, 2021 04:33:12 PM

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் வாயிலாக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நடத்திய விசாரணையில், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியத்தை காப்பதும் அவசியம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிநபர் உரிமைகளும் முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவ்விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்க போதுமான வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசின் தெளிவற்ற மறுப்பு நீதிமன்றத்திற்கு போதுமானதாக இல்லை என்றார்.பெகாசஸ் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, தேசியப் பாதுகாப்பு என்று கூறிவிட்டால் மட்டும் நீதித்துறை அந்த விவகாரத்தில் இருந்து விலகிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு செயல்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement