செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

Oct 26, 2021 11:22:21 AM

உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சலில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளின் பணத்தைச் சேமிக்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கவும் தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேசத்தில் பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு மண்டலத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளின் தொடக்க விழா சித்தார்த்த நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஆதித்யநாத் புத்தர் சிலையைப் பரிசளித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நரேந்திர மோடியின் ஆட்சியில் மருத்துவக் கல்வி ஆளுமை முன்னேறியுள்ளதாகவும், புதிதாக 157 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பூர்வாஞ்சலின் பெருமை முந்தைய அரசுகளால் சிதைக்கப்பட்டதாகவும், மூளைக் காய்ச்சலால் இப்பகுதிக்குக் கெட்ட பெயர் இருந்ததாகவும் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தின் மோசமான மருத்துவக் கட்டமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் யோகி ஆதித்யநாத் எடுத்துரைத்ததை மக்கள் மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முந்தைய அரசுகள் தங்கள் பெட்டியை நிரப்பிக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர், ஏழைகளின் பணத்தைச் சேமிக்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கவும் தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்ததால் 2500க்கு மேற்பட்ட படுக்கைகள் கிடைத்துள்ளதாகவும், ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய அரசு பூர்வாஞ்சல் பகுதி மக்களை நோய் பாதித்த நிலையில் விட்டுச் சென்றதாகவும், இப்போது வட இந்தியாவின் மருத்துவ மையமாகப் பூர்வாஞ்சல் உருவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement