செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

Oct 07, 2021 06:18:34 PM

பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நாட்டில் 35 இடங்களில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் ஆயிரத்து 222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதில் 70 ஆலைகள், பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற நிகழ்வில், பிஎம்கேர்ஸ் நிதியின் கீழ் பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சென்னையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை,ராமநாதபுரம், பரமக்குடி, திருவண்ணாமலை, செய்யாறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர், தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்ததை அடுத்து, அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது எந்த ஒரு நாடும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனை என்று அவர் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 22 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது ஒரு மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் 93 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பெருமிதத்தடன் சுட்டிக்காட்டிய பிரதமர், விரைவில் இந்த எண்ணிக்கையை 100 கோடியை தாண்டும் என்றார். 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement