கொரோனா பெருந்தொற்று தொடங்கியதற்கு பின் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கேர்ஸ் மூலம் மொத்தம் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1,750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. இத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட உள்ளன.
7,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த உற்பத்தி நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தமிழகத்தில் ராமநாதபுரம், பரமக்குடி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் திறந்துவைக்கப்பட உள்ளன.