சண்டிகரைச் சேர்ந்த மாடலிங் அழகியான ஹர்னாஸ் சந்து, வருகிற டிசம்பர் மாதம் இஸ்ரேலில் நடக்கும் உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கிறார்.
இந்த ஆண்டு உலக அளவிலும், வெளிநாடுகளிலும் நடக்கும் அழகி போட்டிகளில் பங்கேற்போருக்கான தகுதி சுற்று மும்பையில் லிவா மிஸ் திவா 2021 என்ற பெயரில் நடைபெற்றது. இதில் சண்டிகரைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து முதல் அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும், 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும் வென்ற 21 வயதான ஹர்னாஸ் சந்து, வருகிற டிசம்பர் மாதம் இஸ்ரேலில் நடைபெறவுள்ள உலக அழகி 2021 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.