புதுச்சேரி காட்டுக்குப்பம் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுச்சேரியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட எட்டு விதமான பொருட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
அதையொட்டி, தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.