செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

குப்பையில்லா நகரங்கள்...! மாசில்லாத நீர்நிலை...! தூய்மை இந்தியா 2.0 நோக்கங்கள்...!

Oct 01, 2021 03:32:03 PM

குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதே "தூய்மை இந்தியா" இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் என்றும், நகரங்களில் மலைபோல் குவித்துள்ள திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்து அவை முழுமையாக அகற்றப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தூய்மை இந்தியா இரண்டாவது கட்டம், அம்ருத் இரண்டாவது கட்டம் ஆகிய திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதே தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

கழிவுநீரைச் சுத்திகரித்தல், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆறுகளில் கலப்பதைத் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் நீர்நிலைகளைக் காப்பது அம்ருத் இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார். நகர்ப்புற வளர்ச்சி சமத்துவத்துக்கு முதன்மையானது என அம்பேத்கர் கருதியதாகவும், அவரின் கனவுகளை நனவாக்கும் நடவடிக்கையாக இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இனிமேல் மிட்டாய்களின் உறைகளைத் தரையில் போடாமல் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுகளைப் போடக்கூடாது எனப் பெரியவர்களைச் சிறார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கழிவுப் பொருட்களில் இருந்து சிலர் வருமானம் ஈட்டுவதாகவும், மட்கும் குப்பை, மட்காக் குப்பை எனப் பிரித்து வழங்கும்படி சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நகரங்களில் மலைபோல் குவித்துள்ள கழிவுகளைப் பிரித்தெடுத்து அகற்றுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று எனத்தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு தூய்மைக்கான பரப்புரையைத் தொடங்கியபோது 20 விழுக்காடு கழிவுகளே வகை பிரிக்கப்பட்டதாகவும், இப்போது அது 70 விழுக்காடாக உயர்ந்து ஒரு நாளில் ஒரு லட்சம் டன் கழிவுகள் வகை பிரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நூறு விழுக்காடு கழிவுகளையும் வகை பிரித்து அகற்றுவதற்கான முயற்சியே தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத் திட்டம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Advertisement
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. தலைமைக் காவலர் உயிரிழப்பு.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement