பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அமரீந்தர் எதிர்ப்பையும் மீறி மாநிலக் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். அதிலிருந்தே கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை சித்து தன்பக்கம் இழுத்தார்.
முதலமைச்சரை மாற்றும்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் சோனியாகாந்திக்குக் கடிதம் எழுதிய நிலையில், பதவி விலகும்படி அமரீந்தரை சோனியா கேட்டுக்கொண்டார். இதையடுத்து இன்று மாலை சண்டிகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்த அமரீந்தர்சிங் அவரிடம் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவமானப்படுத்தப்பட்டதால் பதவியில் இருந்து விலகியதாகவும், தனது ஆதரவாளர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.