செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பயங்கரவாத எதிர்ப்புச் செயல் திட்டம்.! பிரிக்ஸ் நாடுகள் ஏற்பு.!

Sep 09, 2021 10:25:15 PM

பிரிக்ஸ் மாநாட்டுக்குத் தலைமையேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்புச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் விளைநிலமாகிவிடக் கூடாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் 13ஆவது கூட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலியில் நடைபெற்றது. இதில் மற்ற நான்கு நாடுகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மோடி, கொரோனா சூழலிலும் இந்த ஆண்டில் பிரிக்ஸ் தொடர்பான 150 சந்திப்புகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 அமைச்சர்கள் நிலையிலானவை என்றும் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்கள் நவம்பரில் முதன்முறையாகச் சந்தித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாத எதிர்ப்புச் செயல் திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இலக்கை அடைய முடியும் என்பதைக் கொரோனாவுக்கு எதிரான கூட்டுமுயற்சியில் கண்டுணர்ந்ததாகத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்துகள், நோய்காண் முறைகள், சிகிச்சை முறைகள் ஆகியன அனைவருக்கும் சம அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனாவை முறியடிக்க ஒரே வழி அதுதான் என்றும் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் எழும் புதிய சிக்கல் உலகளாவிய மற்றும் மண்டலப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தான் அண்டைநாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக ஆகிவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின் அனைவரும் குழுவாகப் படம்பிடித்துக் கொண்டனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement