செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

காபூலில் இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்து 120 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Aug 17, 2021 10:55:00 AM

காபூல் விமான நிலையத்தில் இருந்து, இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 120 பேருடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை புறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் திரண்டனர். விமானத்தில் முண்டியடித்துச் செல்ல முயன்ற பலரால் அங்கு குழப்பமான நிலைமை காணப்பட்டது.
breathe
விமானத்தைப் பிடித்துத் தொங்கிய 3 பேர் விமானத்தில் இருந்து விழுகிற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கின

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன, கூட்டத்தைக் கலைக்க அமெரிக்க ராணுவத்தினர் சுட்டதாகக் கூறப்படும் நிலையில் விமான நிலைய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

விமான நிலையத்தை நோக்கிச் செல்லுபவர்களை தாலிபன்களும் சுட்டுத் தள்ளுவதாகக் கூறப்படுகிறது.

காபூல் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள், விமானப்படை விமானங்கள் மூலம் தங்கள் நாட்டவரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. விமான நிலையக் கட்டுப்பாட்டை வைத்துள்ள அமெரிக்க வீரர்கள் ராணுவ விமானங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். 

இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று நேற்றிரவு 46 பேரை மீட்டு வந்தது. இந்நிலையில் இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 120 பேருடன் இந்திய விமானப் படை விமானம் ஒன்று காபூலில் இருந்து இந்தியா புறப்பட்டது. எஞ்சிய இந்தியர்கள் அனைவரையும் ஓரிரு நாட்களில் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.


Advertisement
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement