செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

அமளி, கூச்சல் குழப்பம் மூலம் நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் குற்றச்சாட்டு

Aug 03, 2021 01:34:29 PM

அமளிகளால் அடுத்தடுத்து நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் ஜனநாயகத்திற்கு இழுக்கு என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேசமயம் நாடாளுமன்றத்திற்குள் எதிர்ப்பைத் தொடர முடிவு செய்துள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள்,  ராகுல்காந்தி தலைமையில் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கடந்த 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிரொலித்து வருகிறது. இதேபோல, புதிய வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. திரிணமூல் எம்.பி. ஒருவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை பறித்து, கிழித்தெறிந்தது மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுகிறார்களா, கூட்டுப்பொரியல் செய்கிறார்களா என மற்றொரு திரிணமூல் எம்.பி. ட்வீட் செய்தது ஆகியவற்றை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் பேசியுள்ளார். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் செயல் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அமளிகளால் அடுத்தடுத்து அவை நடவடிக்கைகளை முடக்குவது ஜனநாயகத்திற்கு இழுக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்திய அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் தனியே ஆலோசனை நடத்தினர். காலை உணவுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில் காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இந்த சக்தியை ஒருங்கிணைப்பது ஒன்றே முக்கியம் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ராகுல்காந்தி தலைமையில் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.

பின்னர் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்த நிலையில், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement