தெலங்கானா மாநிலம் வாராங்கல் அருகே பாலம்பேட்டில் உள்ள ருத்ரேஷ்வரா கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது .
13ம் நூற்றாண்டில் இதனை உருவாக்கிய சிற்பியின் பெயரால் இந்தக் கோயில் ராமப்பா கோவில் அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஏற்று உலக பாரம்பரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது.
இதையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டார்.