செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

3 மாநிலங்களில் கனமழை : ஆறுகளில் வெள்ளப் பெருக்கு மீட்புப் பணிகள் மும்முரம்

Jul 23, 2021 03:51:10 PM

கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் உட்புறப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கத்ரா அணையில் இருந்து நொடிக்கு நாற்பதாயிரம் கன அடி நீர் காளி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் கனமழையால் கொய்னா ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. பல இடங்களில் ஆற்றுவெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளதால் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. 

கோலாப்பூர் மாவட்டம் சிக்காலியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களைத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்த்தனர். 

நாக்பூர் மாவட்டம் ஹிங்க்னா என்னுமிடத்தில் வேணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாயும் நிலையில் ஆற்றின் நடுவே உள்ள கோவிலில் சிக்கித் தவித்தவரை மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

ராய்காட் மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 36 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழையால் சிரிசில்லா மாவட்ட ஆட்சியரக வளாகம் முழுவதும் முழங்காலளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. குமுரம் பீம், ஜக்தியால், வாரங்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

நிசாமாபாத் மாவட்டம் சாவேல் என்னும் ஊரில் வெள்ளத்தில் மூழ்கிய முதியோர் இல்லத்தில் இருந்து 7 பேரை ரப்பர் படகின் உதவியுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுக் கரை சேர்த்தனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement