செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

Jul 11, 2021 06:21:46 AM

தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின் முதன்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு எடுத்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்த ஆளுநர், மாநிலத்துடன் தொடர்புள்ள முக்கியப் பிரச்னைகள் மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சி பற்றியும் விவாதித்தார். தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவையும் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுவதாக ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் மன்சுக் மண்டவியா, தமிழ்நாட்டுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநரை புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் 45 சிறப்பு முகாம்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கடந்த 2 நாட்களாக தடுப்பூசி மையங்கள் இயங்க வில்லை.

இந்த சூழலில், புனேவில் இருந்து பெங்களூரு வழியாக சென்னை விமான நிலையத்திற்கு, 42 பார்சல்களில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. எனவே, இன்று சென்னை மாநகரில் 13 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement