அடுத்த வாரம் முதல் கனடா, ஜெர்மனி, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கோவிஷீல்டின் 2 டோசுகளையும் போட்டிருக்க வேண்டும். கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளுக்கு கனடா இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜெர்மனியை பொறுத்தவரை தடுப்பூசியின் 2 டோசுகளையும் போட்டவர்கள் அல்லது தொற்றில் இருந்து குணமானதற்கு ஆதாரம் வைத்திருப்பவர்கள் அங்கு குவாரன்டைனில் இருக்க தேவையில்லை.
மாலத்தீவுக்கு பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட RT-PCR நெகடிவ் சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் மாலத்தீவு இமிக்ரேஷன் இணைய தளத்தில் சுகாதார டிக்ளரேஷன் பாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
மாலத்தீவுக்கு சென்றவுடன் குவாரன்டைனோ, கொரோனா சோதனையோ மேற்கொள்ளவேண்டியதில்லை. மாலத்தீவுகளுக்கான விமான சேவை வரும் 15 ஆம் தேதி துவங்குகிறது.