சாதனை படைக்க வறுமை தடை இல்லை என்பதை ஜம்மு - காஷ்மீரின் ஏழை மாணவர் ஒருவர் நிரூபித்துள்ளார். உதம்பூர் மாவட்டம் Amoroh என்ற கிராமத்தைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற இந்த மாணவர்,10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில், 98.6 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
மின்சார வசதி இல்லாத சாதாரண வீட்டில் வசிக்கும் இந்த மாணவர், தன்னுடைய வெற்றிக்குப்பின்னால், சகோதரர் இருப்பதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதி, மருத்துவர் ஆவதே தமது லட்சியம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.