செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அணையில் நீர் திறப்பதில் தகராறு இருமாநிலக் காவல்படையினர் குவிப்பு..!

Jul 04, 2021 08:31:47 PM

கிருஷ்ணா ஆற்றில் உள்ள புலிச்சிந்தலா அணையில் நீர் மின்னுற்பத்தி செய்வது தொடர்பான தகராறில், ஆற்றின் இருபுறமும் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இருமாநிலக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தெலங்கானாவின் நல்கொண்டா, ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டங்கள் இடையே கிருஷ்ணா ஆற்றில் புலிச்சிந்தலா என்னுமிடத்தில் 45 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்டப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது கட்டப்பட்ட இந்த அணை ஆந்திரத்தில் 13 லட்சம் ஏக்கரில் நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும்.

தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அணை ஆந்திரத்தின் கட்டுப்பாட்டிலும், நீர்மின் நிலையம் தெலங்கானாவின் கட்டுப்பாட்டிலும் வந்தது.

அணையில் உள்ள நீரைத் திறந்து தெலங்கானா நீர்மின்னுற்பத்தி செய்து வருகிறது. இந்த நீர் ஆற்றில் பாய்ந்து 3 டிஎம்சி கொள்ளளவுள்ள பிரகாசம் அணைக்கட்டு நிரம்பி வீணாகக் கடலுக்குச் செல்கிறது.

இதனால் பாசனத் தேவையுள்ளபோதே நீரைத் திறக்க வேண்டும் என்றும், இப்போது திறக்க வேண்டாம் என்றும் ஆந்திர மாநிலம் கூறுகிறது. தங்கள் பக்கமுள்ள நீர்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி செய்ய உரிமை உள்ளதாகவும், சட்டப்படி தான் மின்னுற்பத்தி செய்து வருவதாகவும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகராறால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இரு மாநிலக் காவல்துறையினரும் அணைக்கு இருபுறமும் அவரவர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement