உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இவரிடம் இருந்த முதலமைச்சர் பதவி நான்கு மாதங்களுக்கு முன்னர் திரத் சிங் ராவத்திற்கு வழங்கப்பட்டது. இவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த இயலாத நிலை உள்ளதால், திரத் சிங் ராவத் பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து விரைவில் உத்தரகாண்டில் சட்டப்பை தேர்தல் நடைபெற உள்ளதால் அனுபவம் வாய்ந்த திரிவேந்திர சிங் ராவத்தே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.