செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதல் 5 இலட்சம் பேருக்கு கட்டணமின்றிச் சுற்றுலா விசா..! நிதியமைச்சர் அறிவிப்பு

Jun 28, 2021 08:59:49 PM

பன்னாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய பின், சுற்றுலாத் துறைக்குப் புத்துயிரூட்டும் வகையில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதல் 5 இலட்சம் பேருக்குக் கட்டணமின்றி விசா வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒருவருக்கு ஒருமுறை என்கிற வரம்பில், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதல் 5 இலட்சம் பேருக்குக் கட்டணமின்றி விசா வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையோ அல்லது 5 லட்சம் விசா வழங்கும் வரையோ பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

சுற்றுலா முகமைகளுக்கு 10 இலட்ச ரூபாயும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரு இலட்ச ரூபாயும் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருவருக்கு அதிகப்பட்சம் ஒன்றேகால் லட்ச ரூபாய் என்கிற அளவில் 25 இலட்சம் பேர் பயனடையும் வகையில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததைவிட இரண்டு விழுக்காடு குறைவாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் திட்டத்துக்காக இந்த ஆண்டு கூடுதலாக 93 ஆயிரத்து 869 கோடி ரூபாய் செலவிடப்படும் எனத் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கை வசதி செய்யவும், குழந்தைநல மருத்துவத்துக்கும் 23 ஆயிரத்து 220 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

பட்ஜெட்டில் ஏற்கெனவே 85 ஆயிரத்து 413 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் உரமானியத்துக்குக் கூடுதலாக 14 ஆயிரத்து 775 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement