செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டவ்-தே புயல் குஜராத் அருகே நாளை காலை கரையைக் கடக்கும்:மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என வானிலை மையம் தகவல்

May 17, 2021 05:12:18 PM

அதி தீவிரப் புயலாக உருமாறியுள்ள டவ் தே புயல் குஜராத் மாநிலத்தில் நாளை கரையைக் கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் டவ்-தே புயலாக உருவெடுத்தது. இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக மாறி கடலோரப் பகுதிகளில் கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.

டவ் தே புயல் தற்போது பனாஜிக்கு வடமேற்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்குத் தெற்கே 210 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும் டவ் தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தருக்கும், மஹூவாவுக்கும் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் ஆக்ரோஷமான அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதனிடையே, டவ்- தே புயலுக்கு கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிர மாநிலங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும்போது குஜராத்தின் போர்பந்தர், பாவ்நகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சவுராஷ்டிரா, கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேரை வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Advertisement
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement