செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

முகக்கவசம், 2 கஜ இடைவெளி பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்..!

Apr 18, 2021 08:09:52 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாகப் பல நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், இரண்டு கஜ இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளில் தொற்று கண்டறியப்படும் விகிதம் 12 நாட்களுக்கு முன் 8 விழுக்காடாக இருந்தது. அது 12 நாட்களில் 16 புள்ளி 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பை, டெல்லி, லக்னோ, சண்டிகர், போபால் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.  

டெல்லியில் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்படி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சாதோல் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருந்ததால் 10 பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 6 பேர் தான் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், ஆக்சிஜன் இல்லாததே அதற்குக் காரணம் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் கொரோனா நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் மருத்துவமனைகளில் உள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. பார்மர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் நூற்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. 

வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடி தனது தொகுதியில் கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் இன்று காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கொரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் வாரணாசியில் போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகத் தெரிவித்தார். அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் இரண்டு கஜ இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement