செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

அசாமிலும் மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட வாக்குப்பதிவு..!

Mar 27, 2021 12:57:16 PM

சாமில் 47 சட்டமன்றத் தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி அசாமில் 26 விழுக்காடும் மேற்கு வங்கத்தில் 36 விழுக்காடும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாகான், திப்ரூகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 47 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திப்ரூகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் அனைவருக்கும் வெப்பநிலை காணும் சோதனை செய்வதுடன், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியன வழங்கப்படுகின்றன.

மஜுலியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வட்டமிட்டு வாக்காளர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். நாகான் மாவட்டத்தில் ரூபாகி வாக்குச்சாவடியில் காலையிலேயே பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று புரூலியா, ஜார்கிராம், பங்குரா, கிழக்கு மேதினிப்பூர், மேற்கு மேதினிப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 சட்டப்பேரவத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா சூழலில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை ஆகியன வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் திப்ரூகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஜார்கிராமில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். இதனிடையே கோன்டாய் என்னுமிடத்தில் பாஜகவின் சவுமேந்து அதிகாரியின் கார் மீது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சவுமேந்து அதிகாரி காயமின்றித் தப்பினார்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement