நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு தினங்களுக்கு முன் 35 ஆயிரத்து 871 பேருக்கும், நேற்று முன்தினம் 39 ஆயிரத்து 726 பேருக்கும் பெருந்தொற்று உறுதியானது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.